சென்னை: தமிழகத்தில் வரும் 5ம் தேதி, ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை, வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத் திட்டம் / சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்று விடுமுறை என்பதால்,  வருகிற 5-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை  ரேசன் கடைகள் இயங்கும் என உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பொருட்களையும் வழங்கும் வகையில், அனைத்து பொருட்களையும் இருப்பு வைத்துக் கொள்ள ரேசன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்படடுள்ளது.  மேலும், அனைத்து நாட்களிலும், அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என ரேஷன் கடை பணியாளர் களுக்கு உணவுத்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.