முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் வேகமாக பரவி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது,

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும் அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.