ராமநாதபுரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், தொடர்ந்து கைதை செய்யப்படுவதை கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளனர்.

தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றனர். அவர்கள் 3 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி வரும் ஏப்ரல் 1 ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மூன்று மீனவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் இன்று போராட்டத்தை அறிவித்து உள்ளனர். இதற்கிடையில், முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்து, மத்திய அமைச்சருக்கு எப்போதும்போல கடிதம் எழுதி உள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகுகளையும் மீட்க மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக இராமேஸ்வரத்தில் உள்ள 500 க்கும் மேற்பட்ட விசைப்படைகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மீனவர்கள் பிரச்சினை: அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சருடன் சந்திப்பு….