ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் மே 23ம் தேதி அறிவிப்பார் என அவரது சகோதரன் சத்திய நாராயணன் தெரிவித்துள்ளார்.

1996 ஆம் ஆண்டிலிருந்து அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என மாறி மாறி பேசிக்கொண்டிருந்த ரஜினிகாந்த், தற்போது அரசியலுக்கு வருவதை உறுதி செய்வாரா என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இந்நிலையில் திருச்சி கே கே நகரில் ரஜினியின் பெற்றோர்களுக்கு கட்டிய நினைவு மண்டபத்தின் 48வது நாள் மண்டல பூஜைக்கு ரஜினியும் அவர் சகோதரர் சத்திய நாராயணனும் கலந்து கொண்டனர்.

அப்பொழுது நிருபர்களிடம் பேசிய சத்திய நாராயணன் ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து வரும் மே 23ம் தேதி அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.