நடிகர் ரஜினிகாந்த்துக்கு நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு வழங்கவுள்ளது.

இரண்டாவது, என்னுடைய மகள் செளந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்கிற செயலியை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்.

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் “HOOTE APP” மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான “HOOTE APP”-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்” என கூறியுள்ளார்.