சென்னை:
தேர்தலில் ரஜினியின் ஆதரவு யாருக்கும் இல்லை என்று ரஜினி மன்ற நிர்வாகி அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இந்நிலையில், ரஜினி மன்ற தலைமை நிர்வாகி சுதாகர் தெரிவிக்கையில், ரஜினி மக்கள் மன்றத்தினர் ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சியிலும் சேரலாம் அறிவித்தார்.

இதுமட்டுமின்றி, மாவட்ட செயலாளர்களை தொடர்பு கொண்ட அவர், வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த் ஆதரவு யாருக்கும் இல்லை என்றும், அர்ஜூன மூர்த்தி தொடங்கும் கட்சிக்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக வெளியான தகவலுக்கு பதிலளித்த அவர், லதா ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக பரவும் தகவல் பொய்யானது என்றும் சுதாகர் தெரிவித்திருக்கிறார்.