சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மகள் சுஷ்மிதா-வுக்கும் ஓய்வுபெற்ற ஐ.எஸ். அதிகாரி சி. ராஜேந்திரன் மகன் சரணுக்கும் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நேற்று நதிருமணம் டைபெற்றது.

சன் ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குனராக உள்ள மணமகன் சரண் கோபுரம் சினிமாஸின் உரிமையாளராக உள்ள மணமகள் சுஷ்மிதாவை கரம்பிடித்துள்ளார்.

காலையில் நடைபெற்ற திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார், போனி கபூர், கமலஹாசன், பிரபு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாலையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, சிவகார்த்திகேயன், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட ஏராளமான நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் உறவினரான சி. ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம். தென்னரசு கலந்து கொண்டார்.

முன்னாள் அமைச்சர் உதயக்குமார், செல்லூர் ராஜு, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர்கள் எஸ்.வி சேகர், செந்தில், பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்ளுக்கு ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது. சமீப நாட்களாக உடல்நிலை காரணங்களால் வெளியில் செல்வதை அதிகம் தவிர்த்து வரும் ரஜினி, அன்புச்செழியன் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.