பில்வாரா: கொரோனா பரவலை தடுத்த பில்வாரா மாடலைத் தான் டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் நகரம் பில்வாரா. இந்த நகரத்தை நமது மாநிலத்தில் உள்ள திருப்பூருடன் ஒப்பிடலாம். டெக்ஸ்டைல் நகரம் என்று அழைக்கப்படும் பில்வாராதான் அந்த மாநிலத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி.

பில்வாரா மாவட்டத்தில் சோதிக்கப்பட்ட 3678 பேரில் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், நோய்ப் பரவல் சங்கிலியை மிகச் சரியாக திட்டமிட்டு, அந்த மாவட்ட நிர்வாகம் உடைத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையினால் 25 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன் பிறகு அங்கு புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் பரவவில்லை.

இந்த மாடலுக்கு பெயர் பில்வாரா மாடல். கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள டெல்லி, உ.பி உள்ளிட்ட மாநிலங்கள் இந்த மாடலை தான் பின்பற்ற ஆரம்பித்துள்ளன. இதே வெற்றியை ராஜஸ்தான் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

விவசாய பொருளாதாரத்தை காப்பாற்ற அரசு தயாராகி வருகிறது. அதன் விளைவாக தான், உணவு தானியங்களை வாங்க அரசு தயாராகி வருகிறது. அதன் ஒருபடி தான் தானியங்களை வாங்கிக் கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அழைப்பு விடுத்தது.

பில்வாராவில் என்ன நடந்தது என்பதை நீங்கள் சரியாகப் பிரதிபலிக்க முடியாது, ஆனால் அதன் பின்னணியில் உள்ள கொள்கையை எடுத்துச் செல்ல முடியும். நீங்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும்போது, ​​அது மொத்தமாக செயல்படுத்தப்பட வேண்டும்.

கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் பஞ்சாயத்து ராஜ் நெட்வொர்க்குடன் இணைந்து செயல்படுகிறோம். எம்.என்.ஆர்.இ.ஜி.ஏ ஊழியர்கள் வழியாக, ஒரு நாளைக்கு நான்கு முறை கைகளை கழுவ வேண்டும் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நாங்கள் அறிவுறுத்தினோம்.

அது பலன் தந்தது. தவிர, கிராமங்களில் ஒரு சுத்திகரிப்பு இயக்கம் தொடங்கினோம். ராஜஸ்தானின் 37,000 கிராமங்களை சோடியம் ஹைபோகுளோரைடு தெளிப்பு கொண்டு சுத்தப்படுத்தினோம்.

ராஜஸ்தானில் 46,000 கிராமங்கள் உள்ளன, வரும் நாட்களில் எங்களால் பணியை முடிக்க முடியும். 50000 ரூபாய் மதிப்பீட்டில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் உள்ளூர் மட்டத்தில் சானிடிசர்கள் மற்றும் முகமூடிகளை வாங்கி கிராம மக்களிடையே விநியோகிக்கின்றோம். பல ஆல்கஹால் டிஸ்டில்லரிகள் இப்போது சானிடிசர்களை உற்பத்தி செய்கின்றன.

கிராமங்களில் மக்கள் அதிக விழிப்புணர்வு, நம்பிக்கையுடன் இருந்ததால் அது நிச்சயமாக பெரிய உதவியாக இருந்தது. கிராமப்புற பொருளாதாரத்தை இயங்க வைக்க இரு வழிகள் உள்ளன என்று நான் நினைக்கிறேன்.

முதலாவதாக, விவசாயிகளுக்கு அவர்களின் அறுவடைக்கு விரைவில் நியாயமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும். ராஜஸ்தானில், நாங்கள் கொள்முதலை தொடங்கி இருக்கிறோம்.

2வது நுகர்வு. கிராமப்புறங்களிலிருந்து வரும் அத்யாவசிய பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விநியோகச் சங்கிலியை பராமரிக்க வேண்டும். நாங்கள் விநியோகச் சங்கிலியை சரியாக பயன்படுத்தினால் அவர்களுக்கு வேலையளித்து, பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என்றார்.