Skip to content
  • Thu. Jul 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

அரசியல் நெருக்கடி: ஆளுநர் மாளிகைக்கு எம்எல்ஏக்களுடன் படையெடுத்த முதல்வர் அசோக் கெலாட்…

Jul 24, 2020

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, முதல்வர் அசோக் கெலாட், தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன்  இன்று ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநரை சந்தித்து சட்டசபையை கூட்டுவதற்கு அனுமதி அளிக்க வலியுறுத்தினார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் முதல்வர் கெலாட்  மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே ஏற்பட்ட  மோதல் போக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.  இதனால், அரசுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.
இதையடுத்து, சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவியும், காங்கிரஸ் மாநில தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து,  சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கொறடா அளித்த புகாரின் பேரில், 19 பேருக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.  அதைத்தொடர்ந்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்றார்.

ஆளுநர் மாளிகை வளாகத்தில் கூடிய எம்எல்ஏக்கள், சட்டசபை கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து, பின்னர் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து,

ஜூலை 27 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட விரும்புவதாகவும், அதற்கு அனுமதி வழங்கும்படி ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம்  கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடையே முதல்வர் கெலாட், சட்டமன்றத்தை கூட்டுவது தொடர்பாக ஆளுநர் தனது முடிவை அறிவிக்கவில்லை என்றவர்,  ஆளுநர் அனுமதி அளித்ததும், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும், ஆனால், மேலிட அழுத்தத்தின் கீழ் ஆளுநர் செயல்படுவதாகவும், அதனால்தான் சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கான உத்தரவை வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

Post navigation

ராஜஸ்தான் அரசியலில் பரபர திருப்பங்கள்: ஆளுநரை சந்தித்து அசோக் கெலாட் முக்கிய ஆலோசனை
10% ராஜ்யசபா எம்.பி.க்கள் 8வரை படித்தவர்களே… 54 எம்.பி.க்கள் கிரிமினல்கள்… அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்…

Related Post

இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

இந்தியா

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை தொடர்பாக பீகார் மற்றும் உ.பி.யில் 3 பேர் கைது

இந்தியா

மே 9-ல் மேற்கு வங்கம், மே 12-ம் தேதி அசாம் மாநிலங்களில் பாஜக அமைச்சரவை பதவியேற்பு விழா:

உலகம்

உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar
உலகம்

300 பாதுகாவலர்கள் 30000 கோடி ரூபாய் பட்ஜெட்… டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பிற்காக தினசரி செலவு எவ்வளவு ?

April 27, 2026 Sundar
உலகம்

தொடர் கொலை முயற்சிகள்… உயிர் தப்பிய தருணங்கள் : பல தாக்குதல்களை மீறி வந்த டிரம்ப்…

April 26, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer