மும்பை

பி எல் போட்டிகளில் புள்ளி பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை பின் தள்ளி 2 ஆம் இடத்தை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிடித்துள்ளது.

தற்போது நடந்து வரும் ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுக அணிகளான குஜராத் டைடன்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகியவை மிகவும் நன்றாக விளையாடி வருகின்றன.  புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திலும் லக்னோ அணி இரண்டாம் இடத்திலும் இருந்தன.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது.  போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக மொயீன் அலி 93 ரன்களை எடுத்தார்.

ராஜஸ்தான் அணியின் சஹல், ஒபெத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. இதில் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷாஸ்வி ஜெய்ஸ்வால் 59 ரன்களையும், அஸ்வின் 40 ரன்களையும் எடுத்து ஆட்டத்தின் வெற்றிக்கு வித்திட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த போட்டியில் 10 ஆம் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 9 ஆம் இடத்தை பிடித்துள்ளது.  இப்போதும் குஜராத் டைடன்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது.  நேற்றைய வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி லக்னோவை 3 ஆம் இடத்துக்குப் பின் தள்ளி 2 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.