ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 7 மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளான்/

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள போஜ்புரா கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அக்ஷித் ஆவான். நேற்று  காலை, இவன் தனது வீட்டருகே உள்ள ஒரு திறந்தநிலை ஆழ்துளைக் கிணற்றின் அருகில் விளையாடிக்கொண்டிருந்தான்.

விளையாடும்போது தடுமாறி அந்த ஆழ்துளைக் கிணற்றினுள் அவன் விழுந்து சுமார் 70 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். இந்த தகவல் அறிந்ததும் அரசு அதிகாரிகளும், தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினரும் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்

பல மணி நேரம் நீண்ட மீட்பு போராட்டத்தின்போது சிறுவன் அக்ஷித்துடன் மீட்புப் படையினர் பேசியவாறே  இருந்தனர்.மேலும் குழாய் வழியாக அவனுக்குத் தண்ணீரும், ஆக்சிஜனும் வழங்கப்பட்டன. பின்கட்டுகளும் கொடுக்கப்பட்டன. அம்மாநில வேளாண் அமைச்சர் லால்சந்த் கட்டாரியாவும் அங்கு சென்று மீட்புப்பணியைப் பார்வையிட்டார்.

இவ்வாறு சுமார் 7 மணி நேரம் நடந்த போராட்டத்துக்குப் பின் சிறுவன் மீட்கப்பட்டான். அவன் உடனடியாக ஆம்புலன்சில் கொண்டுசெல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டான்..  தற்போது சிறுவனது உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.