சென்னை: தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழக கடற்கரையை ஒட்டி (4.2 முதல் 5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும்,  நாகை,மயிலாடுதுறை,கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

மேலும், காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழையும் தஞ்சை, திருவாரூர்,அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று லேசானது முதல் கமிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூரிர், காரைக்கால் பகுதிகளிலும், நாளை மறுதினம்  தென்தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும்  ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.