சென்னை

டுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் குமரிக் கடல்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துவருகிறது.  அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.

அதாவது கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.