சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 16 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது..

ஏற்கனவே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தின் 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்து உள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.