டில்லி:

கில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் பொறுப்பை ராகுல்காந்தி ஏற்ற பிறகு முதன்முறை யாக இன்று திருப்பதி வந்துள்ளார். திருப்பதி ஏழுமலையான சந்திக்க திருமலை அடிவாரத்தில் இருந்து, திருப்பதிக்கு மலைப்பாதையில் பாதயாத்திரை சென்றார்.

திருப்பதி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஆந்திரா வந்துள்ள  ராகுல்காந்தி  ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் திருப்பதி மலை அடிவாரம் வந்தார். அங்கிருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மலைப்பாதை வழியாக நடந்து செல்கிறார்.

அவருடன் பாதுகாவலர்கள் மட்டுமின்றி செய்தியாளர்களும் நடந்தே சென்றனர். ராகுலின் பாத யாத்திரை கண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல் பாத யாத்திரை செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது…