பெங்களூரு

திர்க்கட்சிகளின் கூட்டம் இந்தியாவின் சித்தாந்தத்தைக் காக்கும் போராட்டம் என ராகுல் காந்தி பாராட்டி உள்ளார்.

வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் தீவிர அரசியல் பணிகளில் இறங்கி உள்ளன. பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23-ந்தேதி முதன்முறையாக நடைபெற்றது.

கூட்டத்தில் 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது மற்றும் பா.ஜ.க.வை வீழ்த்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. எதிர்க்கட்சிகளின் 2-வது கூட்டம் பெங்களூருவில் நேற்றும், இன்றும் நடைபெற்றது.  இன்று இந்த கூட்டம்  நிறைவடைந்ததை தொடர்ந்து, அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் ராகுல் காந்தி,

”இந்த போராட்டம் 2 அரசியல் கட்சிகளுக்கு இடையேயான யுத்தம் அல்ல, இது இந்தியாவின் சித்தாந்தத்தைப் பாதுகாக்கும் போராட்டம் ஆகும்.  வரலாற்றில், இந்தியாவின் கருத்தை யாராலும் எதிர்த்துப் போராட முடிந்ததில்லை என்பதை நாம் அறியலாம், இது  இந்தியாவின் சித்தாந்தத்திற்கும் மோடிக்கும் இடையிலான யுத்தம்”

என்று தெரிவித்துள்ளார்.