சென்னை:
ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

வருகிற செப்டம்பர் மாதம் 7 -ந்தேதி கன்னியாகுமரியில் ‘இந்தியா எல்லாருக்குமான நாடு’ என்ற கோஷத்துடன் ராகுல் காந்தி நடைபயணத்தை துவக்குகிறார். இந்த நடைபயணத்திற்கு, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ என, பெயரிடப்பட்டுள்ளது. இந்த நடைபயணம், 148 நாட்களில், 3,700 கி.மீ., துாரம் கடந்து, காஷ்மீரில் முடிப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல்காந்தியின் ‘இந்தியா ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.