டெல்லி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லிக்கு உண்மையான வளர்ச்சியே தேவை எனக் கூறியுள்ளார்.
பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெரும்.70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில்,
“டெல்லியின் உண்மையான நிலவரம் பொதுமக்களின் கண் முன்னே உள்ளது. மோசமான கட்டுமானம், பணவீக்கம், வேலையின்மை, மாசுபாடு மற்றும் ஊழல் ஆகியவை டெல்லியில் நிலவி வருகின்றன.
டெல்லியை தொடச்சியாக 3 முறை ஆட்சி செய்த ஷீலா தீட்சித்தின் அரசாங்கத்தைப் போல், தற்போது டெல்லிக்கு உண்மையான வளர்ச்சி தேவைப்படுகிறது. மோடி மற்றும் கெஜ்ரிவாலின் போலியான பிரசாரங்கள் மக்களுக்கு தேவையில்லை”
என்று தெரிவித்துள்ளார்.