லடாக்

சீனா இந்திய நிலத்தில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்கவில்லை என பிரதமர் மோடி பொய் சொல்வதாக ராகுல் காந்தி கூறி உள்ளார்.

தற்போது காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல்காந்தி லடாக்கில் உள்ளார். இன்று அவர் பாங்காங் டிசோ ஏரி அருகே வைக்கப்பட்டுள்ள ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார்.

அப்போது ராகுல்காந்தி,

”பல புகார்கள் லடாக் மக்களிடம் இருந்து வந்தன. தங்களுக்கு வழங்கப்பட்ட அந்தஸ்தில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. மாறாக அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும். அங்கு வேலையில்லா திண்டாட்டம் அங்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

சீனா தங்களது நிலத்தை  ஆக்கிரமித்துள்ளது குறித்து இங்குள்ள உள்ளூர் வாசிகள் கவலைப்படுகிறார்கள். சீனப்படையினர் தங்களது மேய்ச்சல் நிலத்தை அபகரித்ததாக அவர்கள் கூறியுள்ளனர். ஒரு அங்குலம் நிலத்தைக்கூடச் சீனா ஆக்கிரமிக்கவில்லை என்று பிரதமர் கூறுகிறார்.

நீங்கள் இங்கே யாரிடமும் இதை கேட்கலாம். பிரதமர் சொல்வதில் உண்மையில்லை. சிறுவனாக இருந்தபோது நான் எனது தந்தையுடன் பாங்காங் டிசோ பகுதிக்கு வந்து இருக்கிறேன். அவர் இது பூமியின் மிக அழகான இடம் என்று அவர் என்னிடம் கூறினார்.

நான் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின்போது லடாக் வரத் திட்டமிட்டு இருந்தும் சில காரணங்களால் பயணத்தை நிறுத்தி வைக்க வேண்டியதாகிவிட்டது. ஆகவே நான் பின்னர் இங்கு வந்து தங்கலாம் என்று நினைத்தேன். நான் நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கிலுக்கும் நான் செல்வேன்

என்று கூறி உள்ளார்.