க்தியர்பூர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்கள் ஆட்சி அமைந்தால் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும் என உரையாற்றி உள்ளார்.

.

தற்போது மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டங்களாக 486 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில் எஞ்சிய 57 தொகுதிகளுக்கு இறுதிகட்டமான 7 ஆம் கட்ட தேர்தல் வரும் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜூன் 1 அன்று உத்தரபிரதேசம் (13 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), மேற்குவங்காளம் (9 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), இமாச்சலபிரதேசம் (4 தொகுதிகள்), ஜார்க்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகரில் 1 தொகுதி என மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பீகார் மாநிலம் பக்தியர்பூரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரத்தில் ஈடுபட்டபோது

“மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியமைத்தவுடன் அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும். ஜூன் மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள பெண்கள் வங்கி கணக்கில் தலா ரூ. 8,500 செலுத்தப்படும்.

இந்த திட்டம் ஒவ்வொரு குடும்பங்களின் நிதி நிலையில் மாற்றத்தை கொண்டுவரும்.

பிரதமர் மோடி தன்னை கடவுள் அனுப்பி வைத்தார் என்று கூறுகிறார். ஆனால், ஜூன் 4ம் தேதிக்கு பிறகு ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை கேள்வி எழுப்பினால், எனக்கு எதுவும் தெரியாது, என்னை கடவுள் அனுப்பினார் என்று பிரதமர் மோடி கூறுவாரா.”

என உரையாற்றி உள்ளார்.