தான்

குஜராத் மக்கள் சேர்த்து வைத்த பணத்தை மோடி தனது மேஜிக் மூலம் 22 வருடங்களில் மாயமாய் மறைத்து விட்டார் என ராகுல் காந்தி கூறி உள்ளார்

குஜராத் தேர்தலில் வாக்கு சேகரிக்க குஜராத் மாநிலம் எங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.    அதில் ஒரு பகுதியாக பதான் பகுதியில் சுற்றுப்பயணத்தில் உள்ளார்.   அவர் அங்குள்ள தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் வாசிக்கும் பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டார்.  அப்போது அந்த பழங்குடியினரிடையே ஒரு பாம்பாட்டியை சந்தித்தார்.   தனது மேஜிக் மூலம் வாழ்வை நடத்துவதாக அந்த பாம்பாட்டி ராகுல் காந்தியிடம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி தனக்காக சில மேஜிக் செய்யுமாறு அவரைக் கேட்டுக்கொண்டார்.  அதற்கிணங்க அவர் பல மேஜிக் வித்தைகளை செய்தார்.   அதில் ஒன்றாக காற்றில் இருந்து ரூபாய் நோட்டை வரவழைத்தார்.    இந்த நிகழ்வு முடிந்ததும் ராகுல் காந்தி கூட்டத்தினரிடம், “நீங்கள் தற்போது செய்ததைத்தான் மோடி கடந்த 22 வருடமாக செய்து வருகிறார்.   ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.   நீங்கள் பணத்தை உருவாக்கி அதை சேமித்து வருகிறீர்கள்.  ஆனால் மோடிஜி அதை மாயமாக மறைத்து விடுகிறார்” என கூறினார்.