நாட்டின் 75 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றப் போராடிய சுதந்திர போராட்ட தியாகிகளை இன்றைய இளம் தலைமுறையினர் நினைவு கூர்ந்தனர்.

அதன் ஒரு பகுதியாக டெல்லி பிர்லா மந்திரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்றார்.

அங்கு காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினார்.

இதே இடத்தில் இந்த ஆண்டு காந்தி நினைவு தினமான ஜனவரி 30 அன்று அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி “காந்திஜியை ஒரு ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவவாதி சுட்டுக் கொன்றான் இதனால் காந்திஜி இப்போது இல்லை என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை எங்கு இருக்கிறதோ அங்கு காந்தி இன்னும் உயிருடன் இருக்கிறார்” என்று அப்போது அவர் குறிப்பிட்டிருந்தார்.