டெல்லி
டெல்லியில் உள்ள ரயில் நிலைஅயட்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்ததற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ள்ச்ச்ட்/
மகா கும்பமேளாவுக்கு செல்ல டெல்லி ரயில் நிலையத்தில்நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது நேற்றிரவு 10 மணியளவில் ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி பலர் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.டெல்லியில் விடுமுறை தினம் என்பதால் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து.
”டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தி மிகவும் வருத்தமாகவும், துயரமாகவும் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
கும்பமேளாவுக்கு அதிகளவில் மக்கள் செல்வதை கருத்தில் கொண்டு, அதற்கேற்ப ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும். ரெயில்வே துறையின் தோல்வியையும், அரசின் உணர்ச்சியற்ற தன்மையையும் இந்த சம்பவம் மீண்டும் காட்டியுள்ளது. கும்பமேளாவுக்கு செல்லும் மக்கள் யாரும் உயிரிழக்கக்கூடாது என்பதை அரசாங்கமும் நிர்வாகமும் உறுதி செய்ய வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.