தோய்முக்

பாஜக நாட்டை ஜாதி, மதம் மற்றும் மொழியால்  பிரிக்கிறது என ராகுல் காந்தி கனடனம் தெரிவித்துள்ளார்.

தற்போது காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இரண்டாம் கட்ட யாத்திரை மேற்கொண்டுள்ளார். அவர் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில், நடை பயணமாகவும், பேருந்திலும் பயணம் செய்து மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். கடந்த 14 ஆம் தேதி மணிப்பூரில் இருந்து அவரது யாத்திரை இன்று அருணாச்சல பிரதேசத்தை அடைந்தது.

அங்கு தோய்முக் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது அவர் அப்பகுதி மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது ராகுல் காந்தி

”பாஜக ‘ஜாதி, மதம், மொழியால் நாட்டை பிரிக்கப் பார்க்கிறது. மக்கள் தங்களுக்குள் சண்டையிட வேண்டும் எனத் தூண்டுகிறது. பாஜக அரசு மக்களின் நலனுக்காக பாடுபடாமல் ஒரு சில தொழில் அதிபர்களின் நலனுக்காக பாடுபடுகிறது. 

அருணாச்சல பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து வழங்கிய எங்கள் கட்சி ஏழைகளின் பிரச்சினைகளுக்கு எதிராக குரல் எழுப்பவும், இளைஞர்கள், பெண்கள் மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காகவும் எப்போதும் தயாராக உள்ளது.

எனது யாத்திரையின் போது, நான் காலை முதல் மாலை வரை பல மணி நேரம் பயணித்து, மக்களின் வேதனைகளையும், துன்பங்களையும் கேட்டு வருகிறேன்”’ 

என்று கூறி உள்ளார்.