டில்லி

வதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார்.

மோடி என்னும் பெயர் குறித்து தவறாகப் பேசியதாகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்  காந்தி மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.  வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனால் ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.  நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வழக்கு தொடர்ந்தார்.

அங்கு ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு  தெரிவித்து, ராகுல் காந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது .

தற்போது, குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தற்போது ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.