சென்னை: தமிழ்நாட்டில் காங்கிரஸ் கிராம கமிட்டி மாநாடு இம்மாதம் இறுதியில் நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள காங்கிரஸ் தலைவர்களான, ராகுல்காந்தி, பிரியங்கா காந்திர தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாத இறுதியில் பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இருவரும் தமிழகம் வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.28 அல்லது 29-ம் தேதியில் ராகுல் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்த வருகையின்போது,   காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள  கூட்டணி குழப்பத்துக்கு முடிவுரை எழுதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதற்காக  தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முதல்வர் ஸ்டாலினுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்திருக்கிறது. இதற்கிடையில், காங்கிரஸில் ‘அதிக இடம், ஆட்சியில் பங்கு’ என்ற கோஷம் வலுப்பெற்று வருகிறது. இது திமுகவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையில்,  சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக காங்கிரஸ்  சார்பில், கிராம கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டை இம்மாத இறுதியில் நடத்த மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது இந்த மாநாடு  சென்னை, திருச்சியில் காங்கிரஸ் மாநாடுகள் நடக்கவுள்ள நிலையில் குமரியில் மீனவர்கள் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமிழ்நாடு வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது.

இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஜன.28 அல்லது 29-ம் தேதியில் ராகுல் தமிழகம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றனர்.

ஏற்கனவே பிரதமர் மோடி ஜன.28-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், கன்னியாகுமரியில் பாஜக சார் பில் நடைபெற உள்ள ‘தாமரை மகளிர் மாநாட்டில்’ பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். இந்த மாநாட்டில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஜன.28-ம் தேதி பிரதமர் வருவதற்கு முன்பாகவே தொகுதிப் பங்கீடு முடிவடையும் என்று தெரிகிறது.

[youtube-feed feed=1]