நாகர்கோவில்:
ன்று 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து துவக்கினார்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும், 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில், இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இன்று 3வது நாள் நடை பயணத்தை ராகுல்காந்தி நாகர்கோவில் ஸ்காட் கல்லூரியிலிருந்து துவக்கினார்.

அவர், நாகர்கோவில், சுக்கான் கடை, வில்லுக்குறி, புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை வழியாக தக்கலை வரை நடைபயணம் செல்ல உள்ளார்.