மும்பை

ந்திய அணியின் இலங்கை பயணத்தில் பயிற்சியாளராக முன்னாள் அணித் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவரான ராகுல் டிராவிட் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.  வரும் ஜூலை மாதம் இந்திய ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது.

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியும் இலங்கை அணியும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோத உள்ளன.  மேலும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர்கள் போட்டியிலும் மோத உள்ளன.

அத்துடன் ஜூலை 18 ஆம் தேதி அன்று இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் மோத உள்ளது.

இந்த போட்டிகளைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணி விராத் கோலி தலைமையில் விளையாட உள்ளது.

இதில் இலங்கை போட்டிகளில் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணிகளுக்கு இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் தலைவர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணிக்குப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி அணி உடன் செல்கிறார்.