புனே

ர் இந்தியா விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இன்று தலைநகர் டெல்லியில் இருந்து மகாராஷ்டிர மாநிலம் புனேவுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.  இந்த விமானத்தில் 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமான பணியாளர்கள் பயணித்தனர்.

அந்த விமானம் மகாராஷ்டிர வான்பரப்பில் நுழைந்து நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தின் மீது பறவை மோதியது. எனவே விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தை அவசரமாக புனே விமான நிலையத்தில் தரையிறக்கினார்.

இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், புனேவில் இருந்து இந்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கு செல்லவில்லை என்பதால் டெல்லிக்கு டிக்கெட் பதிவு செய்திருந்த பயணிகள் விமானத்தில் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

ஆகையால் அந்த பயணிகளின் டிக்கெட் தொகை திருப்பி ஒப்படைக்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.