சிவான்
பிரதமர் மோடி பீகாரில் பல வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்துள்ளார்.
ஜனாதா தளம் – பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் பீகாருக்கு பிரதமர் மோடி இன்று சென்றார். பிரதமர் 2 நாட்கள் பயணமாக பீகார், ஒடிசா மற்றும் ஆந்திராவுக்கும் செல்ல உள்ளார்
இன்று பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்ததுடன் பல, புதிய திட்டப்பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர்கள் சாம்ராட் சவுகான், விஜயகுமார் சின்ஹா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வைஷாலி – தியோரியா ரெயில் பாதை, வந்தே பாரத் ரெயில் சேவை, ஆறு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பேட்டரி எரிசக்தி சேமிப்பு அமைப்பு, துணை மின் நிலையங்கள் உள்பட 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.