சிங்கப்பூர்:
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில், பங்கேற்ற சீனாவின் வாங் ஷியை 21-9, 11-21, 21-15 என்ற புள்ளிகள் கணக்கில் பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

சர்வதேச அளவிலான WTA 500 தொடர்களில் பி.வி.சிந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.