மான்செஸ்டர்:
ங்கிலாந்திற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களமிறங்கிய இந்நிலாந்து அணி, 45.5 ஓவர் முடிவில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்களும், சாஹல் 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
260 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, 42.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், இந்திய அணி ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஏற்கனவே டி20 தொடரையும் இந்தியா கைப்பற்றி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி தொடர் டிரா ஆனது குறிப்பிடத்தக்கது.