மாஸ்கோ

ஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவால் எவ்வித உதவியும் இல்லை எனக் கூறி உள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தனது படைகளை அனுப்பித் தாக்குதலைத் தொடங்கியது. ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்ய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு ரஷ்யாவை எதிர்த்து உக்ரைன் போரிட்டு வருகிறது. மேற்கத்திய நாடுகள் உக்ரைன் ராணுவத்திற்குத் தேவையான ஆயுத உதவி, பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றன.

அண்மையில் அபாயகரமான ஆயுதமாகக் கருதப்படும் ‘கிளஸ்டர்’ குண்டுகளை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகளின் ஆதரவு எந்த வகையிலும் உதவவில்லை என்று ரஷ்ய அதிபர் புதின விமர்சித்துள்ளார்.

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து ரஷ்யப் படைகளை வெளியேற்ற உக்ரைன் ராணுவம் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்து வருவதாகவும், மேற்கத்திய நாடுகளால் உக்ரைனுக்கு வழங்கப்பட்ட பீரங்கிகள், வெடிகுண்டுகள், கவச வாகனங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றால் எவ்வித உதவியும் இல்லை என்றும் புதின் தெரிவித்துள்ளார்.