புதுடெல்லி:
சோனியா முடிவுக்கு கட்டுப்படுவோம் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங் தெரிவித்தார்.

பஞ்சாப் மாநில சட்டசபைக்கு, விரைவில் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், அமரீந்தர் சிங்கிற்கு எதிராக முன்னாள் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்து, பகிரங்கமாக போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனால் பஞ்சாபில், காங்கிரஸ் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இதை தவிர்க்க, காங்., தலைவர் சோனியா அமைத்த மூன்று பேர் அடங்கிய குழு முன் ஏற்கனவே அமரீந்தர் சிங் ஆஜராகி விளக்கமளித்துள்ளார்.

ஏற்கனவே டில்லி சென்ற நவ்ஜோத் சிங் சித்து, இந்த விவகாரம் தொடர்பாக, காங்., – எம்.பி., ராகுல், பொதுச் செயலர் பிரியங்கா ஆகியோரை சந்தித்து பேசினார். இந்நிலையில் காங். மூத்த தலைவர் சோனியாவை சந்திக்க பஞ்சாப் அமரீந்தர்சிங் இன்று சந்தித்து பேசினார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி, சோனியாவை சந்தித்து அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதித்தேன். பஞ்சாப்பை பொறுத்தவரை சோனியா எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம்.வரப்போகும் தேர்தலில் தான் கவனம் செலுத்தப்படும் என்றார்.