ஜம்மு:
புல்வாமா தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் புல்வாமா பகுதியில் வாகனத்தில் சென்று கொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்.