புதுச்சேரி:
புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2ம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதல்வராக ரங்கசாமி மட்டும் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சரவை இதுவரை பதவியேற்கவில்லை.

இந்நிலையில், புதுச்சேரி சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து, வரும் 26ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

வரும் 26ஆம் தேதி காலை 9 முதல் 10 மணிக்குள் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள லட்சுமிநாராயணணுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இதையடுத்து 10 முதல் 12 மணிக்குள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள சட்ட பேரவைத் தலைவர் அறையில், 15ஆவது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மட்டும் நியமன உறுப்பினர்களுக்கு தற்காலிக பேரவைத் தலைவர் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.