புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புதுச்சேரி கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது உருவ சிலை மற்றும் படங்களுக்கு அதிமுகவினர் மற்றும் தமிழகஅரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது.

இநத் நிலையில், புதுச்சேரியில் உள்ள   எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு, பொறுப்பு  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் அவரது சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ள டிவிட்டில், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.எம்.ஜி.ஆர் அவர்களது 105வது பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.