நெல்லை
நெல்லை வந்துள்ள தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு பொதுமக்கல் உற்சாக வரவேற்ப அளித்து:ள்ளனார்
முதல்வர் மு க ஸ்டாலின் தற்போது நெல்லையில் 2 நாட்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று நெல்லை வந்த முதல்வர்ர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். நெல்லை. கே.டி.சி. நகர் பகுதியில் நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்தார்.
பிறகு கங்கைகொண்டான் சிப்காட் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் ரூ.4,400 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள டாடா பவர் சோலார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்கி வைத்தார். மேலும் விக்ரம் சோலார் நிறுவனத்தின் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன் சிப்காட்டில் அமைக்கப்பட்டுள்ள மெகா உணவு பூங்காவையும் திறந்து வைத்தார்.
நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 5 மணியளவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.40 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தை, காய்கனி சந்தை மற்றும் புதிய வணிக வளாகத்தை திறந்து வைக்கிறார்.
பிறகு காணொலி காட்சி வாயிலாக, நெல்லை டவுன் பாரதியார் பள்ளிக்கு அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், நயினார்குளம் தெற்கு பகுதியில் மேம்படுத்தப்பட்ட பணிகளை திறந்து வைக்க உள்ளார்ர்.
பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் தி.மு.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பின்பு பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். விழாவில்ல் மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய பலர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைகிறார்கள். இன்று இரவிவு நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகையில் முதல்வர் ஓய்வெடுக்கிறார்.