Skip to content
  • Sun. Jul 12th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

தமிழகத்தில் ஆகஸ்டு 1 முதல் மீண்டும் பொது போக்குவரத்து தொடங்குகிறது?

Jul 29, 2020

சென்னை:

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில், ஏற்கனவே தொடங்கப்பட்டது போல, பொது போக்குவரத்து ஆகஸ்டு 1ந்தேதி  தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25-ந்தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பொதுபோக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. இடையில், ஊரடங்கில் வழங்கப்பட்ட சில தளர்வுகள் காரணமாக, ஜூன் மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் பொது போக்குவரத்து சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மண்டலம் வாரியாக தொடங்கப்பட்டது.
ஆனால், இடையில் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்ததால் பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் 6வது கட்ட ஊரடங்கும் ஜூலை 31-ந்தேதியுடன்  முடிவுக்கு வருகிறது. இதை யடுத்து, மேலும் தளர்வுகளுடன்  ஊரடங்கு நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் மீண்டும் பொதுபோக்குவரத்தை இயக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்டங்களுக்குள்ளே அல்லது ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் பிரிக்கப்பட்டபடி, மண்டலங்களுக் குள்ளே போக்குவரத்தை இயக்க தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாகவும், போக்குவரத்து தொழிலாளர்களை தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சென்னையில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே சில பேருந்துகள் இயக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், முழுமையாக போக்குவரத்தை தொடங்க மேலும் ஒரு மாதம் ஆகலாம் என்று கூறப்படுகிறருது.
ஏற்கனவே பிரிக்கப்பட்ட மண்டலங்கள் விவரம் வருமாறு
மண்டலம் 1  : கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்
மண்டலம் 2 : தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி
மண்டலம் 3:  விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி
மண்டலம் 4 : நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை
மண்டலம் 5 : திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம்
மண்டலம் 6 :  தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி
மண்டலம் 7 : காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு
மண்டலம் 8 : சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி

Post navigation

வாங்க… எங்களோட வந்து பழகுங்க… கொரோனாவை கிண்டலடிக்கும் வீடியோ….
தமிழக ஆளுநரின்  உதவியாளருக்கு கொரோனா தொற்று…

Related Post

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

News

4வது ஆண்டு: காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் யோகி, தர்மேந்திர பிரதான், ஆளுநர் ரவி பங்கேற்பு

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer