சென்னை: மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் ஆதாரத்தை காட்டி  ரூ.50000க்கு மேல் பணம் எடுத்துச்செல்ல அனுமதி  வழங்கப்படுவதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறி உள்ளார்.

மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம் என்று கூறி உள்ளார்.

மருத்துவ காரணத்திற்காக பொதுமக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட செயலிகள் வழியாக காண்பித்து எடுத்து செல்ல தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனுமதி

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி மார்ச் 15ந்தேதி  வெளியானது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள் ரூ.50ஆயிரத்துக்கு மேல் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வியாபார்கள் என பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அவசர மருத்துவ தேவைக்காக பணம் எடுத்துச்சென்றாலும் பறிமுதல் செய்யப்படுகிறது. இதுபொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது.

இநத் நிலையில்,  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கையேடு 2026 வெளியீடு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட   தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  கையேட்டினை வெளியிட்டார். இந்த கையேட்டில் தமிழகத்தில் ஏற்கனவே நடைபெற்ற தேர்தல் குறித்தான அனைத்து விவரங்களும் விரிவாக இடம் பெற்றுள்ளது.

நிகழ்ச்சியில்  பேசிய அர்ச்சனா பட்நாயக்,  கடந்த காலத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் நகர்ப்புறத்தில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும் , நகர்ப்புறத்தில் வாக்குபதிவை அதிகரிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது என கூறினார்.

பின்னர்,  செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,  வணிகர்கள் மற்றும் பொது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் அது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.

பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது என பறக்கும் படையினருக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் இயல்பாக கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக் கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

மருத்துவ காரணத்திற்காக பொது மக்கள் 50,000க்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் அதற்கான ஆதாரத்தை whats app உள்ளிட்ட சமூக வலைதளம் வழியாக கூட காண்பித்து பணத்தை எடுத்து செல்லலாம்.

சமூக வலை தளங்களில் பிரச்சாரம், வெறுப்பு பேச்சுக்கள் சைபர் காவல் துறையின் மூலம் கண்காணிக்க பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் கண்காணிப்பு செய்யப்படு வருகிறது.

பொதுமக்கள் தேர்தல் குறித்து இணையதளம் மற்றும் கடிதம் வாயிலாக புகார் ஏதேனும் அளித்தால் அதில் அவர்கள் கையொப்பமிட்டு புகார் தெரிவிக்க வேண்டும். தற்போது வரை வந்த மனுக்கள் கையொப்பம் இல்லாமல் வந்து உள்ளது.

ஒரே வேட்பாளர் பெயரில் நிறைய பேர் வேட்பு மனு செய்து போட்டியிடக் கூடிய சூழல் உள்ளது. தேர்தலில் ஒரே பெயரில் மற்றவர்கள் போட்டியிடக் கூடாது என்று சொல்ல முடியாது. அதனால் தான் வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய பேலட் பேப்பர் தயார் செய்யப்பட்டுள்ளது என்றார்.

[youtube-feed feed=1]