Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது! நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்…

Oct 5, 2020
சென்னை: அக்டோபர் 31ந்தேதி வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அக்டோபர் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான நிகழ்வுகளுக்கு  தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், கடற்கரை, தியேட்டர் போன்ற ஒருசில பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு தடை தொடர்கிறது.
இந்த நிலையில்,  மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்த மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட கோரி மீனவர் நலன் அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன், தொடர்ந்த வழக்கின் கடந்த விசாரணையின்போது, சென்னை உயர்நீதி மன்றம், மெரினா கடற்கரை, மற்றும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பியதுடன், சென்னையில் கொரோனா ஊரடங்கில்  தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு என்ன முடிவு செய்துள்ளது என்றும், கடற்கரையில் புதிய கடைகளை வைக்க உரிமம் வழங்குவது குறித்த டெண்டர் பணிகள் எந்த அளவில் இருக்கிறது என்பதையும் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது,  அப்போது, சென்னை மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சென்னையில் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் அக்டோபர் மாதம்  31 வரை பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், தமிழகத்தில் ஊரடங்கு இந்த மாதம் இறுதிவரை  நீட்டிக்கப்பட்டுள்ளதால், கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என பதில்  தெரிவித்துஉள்ளது.
மேலும்,
மெரினாவில் தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டர் நவம்பர் 9 ந்தேதி திறக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, டெண்டர் திறப்பு குறித்து நவம்பர் 11க்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறுவோருக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து, வசூலித்து வருகின்றனர். அத்துமீறலில் ஈடுபட்டால் ரூ.500-ம், முக கவசம் அணியாவிட்டாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கா விட்டாலும் ரூ.200-ம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. அதுபோல தடையை மீறி கடற்கரைக்கு வருவோரிடம்,  ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது  குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlZPVG1oVXRZeW9J வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பம் தரும் திருப்பரங்குன்ற திருப்புகழ்..
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா?

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu #kathirkaamam
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா..திருத்தணியில் எழிலாகுமா? #thiruppugazh #kathirkaamam​
Load More... Subscribe

Post navigation

ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை! கே.எஸ்.அழகிரி
டெல்லி உயர்நீதி மன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணை தொடங்கியது…

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer