கொன்றுவிட்டு பிணத்துடன் உறவு போலீசாரை உறையவைத்த சைக்கோ.

ஜூன் மாதம் கடந்த 26 ஆம் தேதி மும்பையின் நாலசோபராவில் (கிழக்கு) 32 வயதான பெண் ஒருவர் வீட்டிற்குத் தேவையான மாளிகைப் பொருட்கள் வாங்கக் கடைக்குச் சென்றுள்ளார்.  சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால், அவரின் கணவரும் வீட்டில் வேலை செய்பவரும் சேர்ந்து காணாமல் போன பெண்ணை தேடியுள்ளனர். ஆனால் எங்கே தேடியும் கிடைக்காததால் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி, நாலசோபராவில் (கிழக்கு) சந்தன் நாகாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பிக்-அப் வேனுக்குள் ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.  அது காணாமல் போன 32 வயது பெண்மணி தான் என்று அவரது கணவர் மூலம் உறுதி செய்யப்பட்டது.  பிரேதப் பரிசோதனையில், அந்தப் பெண் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.  மேலும் இவர் இறந்த நிலையிலேயே கற்பழிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டது.

இதையடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசோதனை செய்ததில், அவர் பொம்மை கடைக்குச் சென்றது தெரிய வந்துள்ளது.  இது பற்றி பொம்மை கடை உரிமையாளரிடம் விசாரித்ததில்,  பொம்மை விலை தொடர்பாக ஜூன் 26 அன்று கடை உரிமையாளருடன் அந்தப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அக்கடைக்காரரைத் தீவிரமாக விசாரித்தனர்.  அப்போது வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடையின் உரிமையாளர் அந்த பெண் தலை முடி பிடித்து இழுத்து கடைக்குப் பின்னால் அமைந்துள்ள தனது அறைக்கு அழைத்துச் சென்று கழுத்து நெரித்துக் கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அந்த நபர் இறந்து போன சடலத்துடன் உடலுறவு கொண்டதாகவும் கூறியுள்ளார்.  மேலும் அந்தக் கடைக்காரர் இரவு வரை இறந்து போன உடலுடனேயே இருந்துவிட்டு, நடு இரவில் அப்பெண்ணின் உடலை பிளாஸ்டிக் கவரில் மூடி அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேனில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து போலீசார் அக்கடைக்காரர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

பிணத்துடன் உறவுகொள்ளும் அளவுக்கு அவர் சைக்கோவாக  உள்ளதால், வேறு குற்றங்களையும் செய்துள்ளாரா என விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

– லெட்சுமி பிரியா