கவரவ கொலையைப் படமாக்கும் பிரபல இயக்குநர் மீது வழக்கு..

தெலுங்கானா  மாநிலத்தைச் சேர்ந்த பிரனாய் குமார் என்ற தலித் இளைஞர் , உயர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பெண்ணின் தந்தை மாருதிராவ் முக்கிய  குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் அவர் ஐதராபாத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

இந்த கவுரவ கொலையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, ‘ MURDER’ என்ற பெயரில் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்குத்  தடை விதிக்க கோரி, கொல்லப்பட்ட பிரனாய் குமாரின் தந்தை பாலசாமி, அங்குள்ள எஸ்.சி, மற்றும் எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

’’நீதி மன்றத்தில் நடந்து வரும் எனது மகன் கொலை வழக்கு விசாரணை, இந்த திரைப்படத்தால் பாதிக்கப்படும்’ என்று அவர் மனுவில் கூறி இருந்தார்.

இதையடுத்து நீதிமன்ற ஆணையின் பேரில் , சமூகங்களிடையே பகைமையைத் தூண்டுவதாக ராம்கோபால் வர்மா மீது மிர்யுலகோடா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

-பா.பாரதி.