டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு கடந்த ஜூன் 3 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று குணமடைந்தார். முன்னதாக  ஜூன் மாதம்  2 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் பொறுப்பு தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. . அதைத்தொடர்ந்து, டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டங்களில்  பிரியங்காகலந்துகொண்டார். இந்த  நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள பிரியங்கா,  இன்று (10ம் தேதி) மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதனால் வழிகாட்டு நெறிமுறைகளின் படி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என கூறியுள்ளார்.