சென்னை: சென்னையின் புறநகர் பகுதியான வண்டலூர் அருகே செயல்பட்டு வரும் தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. ஆனால், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் விடுதியில்  தங்கியிருந்து படிக்கும் மாணவர்களிடையே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை நேற்று இரவு வெளியிட்ட தகவலின்படி, மாநிலம் முழுவதும் 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக தெரிவித்திருந்தது. அதிக பட்சமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 46  பேருக்கும், சென்னையில் 33 பேர் உள்பட மொத்தம் 8 மாவட்டங்களில் தொற்று பரவல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழக விடுதி மாணவர்கள் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. விடுதி மாணவர்கள் சிலர் சளி, காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு தங்கியுள்ள மற்றும் படிக்கும்  3,000 மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,  நிலையில் 74 பேருக்கு தொற்று உறுதி தொற்று பாதிக்கப்பட்ட 74 மாணவர்களும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.