டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,338 பேருக்கு கொரோனா, 19 பேர்  உயிரிப்புடன்,  2,134  பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்  இன்று காலை 8  மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது.

கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக மேலும், 2,338 பேர் பாதித்துள்ளனர். தினசரி பாதிப்பு விகிதம் 0.64% ஆக உள்ளது.

தொற்று காரணமாக மேலும்,19 பேர் கடந்த 24மணி நேரத்தில் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 2,134 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது நாடு முழுவதும் 17,883 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை 1,93,45,19,805 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 13,33,064 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.