புதுடெல்லி:
ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள மொத்த ருப்பாய் நோட்டுகளில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளின் பங்கு தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.