புதுடெல்லி:
பிரதமர் மோடி டெல்லி, செங்கோட்டையில் 9வது முறையாக தேசியக் கொடியேற்றினார்.


தொடர்ந்து மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன். 200 கோடி தடுப்பூசிகள் செலுத்தி சாதனை படைத்துள்ளோம். உங்களில் ஒருவனாக இருந்து நான் பெற்ற அனுபவங்களை உபயோகப்படுத்தி வருகிறேன் புதிய பாதையில் அடியெடுத்து வைக்கிறது இந்தியா; நம் நாடு பல்வேறு மகத்தான தலைவர்களை தந்த நாடு என்பதில் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை உறுதி செய்துள்ளோம் என்றும், 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை நாம் கண்டிருக்கிறோம் என்றும் கூறினார்.

மேலும், 8 ஆண்டுகளுக்கு முன் நாட்டை வழிநடத்தும் பொறுப்பு எனக்கு கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.