சென்னை : பூந்தமல்லி-போரூர் இடையே செயல்படுத்தப்பட ள்ள மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா வரும் ஜனவரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலை யில், இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பணியின் மெட்ரோ ரயில் சேவை பெரும் பங்கான்றி வருகிறது. இதனால், மெட்ரோ ரயில் சேவைகள் புறநகர் பகுதிகள் வரை விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், மெட்ரோ சேவையின் இரண்டாம் கட்ட பணிகள் மாதாவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், பூந்தமல்லி முதல் சென்னை கலங்கரை விளக்கம் வரையிலும், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ தொலைவிற்கு நடைபெற்று வருகின்றன.
இதில் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள வழித்தடமான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரெயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த வழித்தடத்தில், பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்துள்ளது. அதனால், அந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க தமிழ்நாடு அரசும், மெட்ரோ ரயில் நிவாகமும் செயதுள்ளது.
இந்த வழித்தடத்தில் ஆளில்லா (டிரைவர் இல்லாத) மெட்ரோ ரயில் சேவை நடைபெற உள்ளது. இதற்கான சோதனை ஓட்டங்கள் முடிவடைந்த நிலையில், சமார் 99 சதவிகிதபணிகள் முடிவடைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயிலை இயக்க சிஎம்ஆர்எல் திட்டமிட்டுள்ளது. டெல்லி மெட்ரோ இதனை நிர்வகிக்க இருக்கிறது.
இந்த மெட்ரோ ரயில் சேவை 2026 ஜனவரியில் தொடங்கப்பட உள்ளது., இந்தள தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ளவுள்ளார்.
ஏற்கனவே, தமிழகத்துக்கு பிரதமர் மோடி வருகின்ற ஜனவரி மாதம் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பொங்கல் விழா, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அத்துடன் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவிலும் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]