புதுடெல்லி:
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் உடல் நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மார்ச் 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்த இருதய அறுவை சிகிச்சையானது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்றதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை தற்போது முன்னேற்றம் கண்டு வருகிறது. இதனால் அவர் ஐசியூவில் இருந்து சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவர்களின் தொடர்பில் உள்ள ராம்நாத் கோவிந்த் இன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் கண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.